Friday, April 3, 2009

நேருவின் பேரனின் மகன்

அரசியலில் சிலர் சில சமயம் செய்வதறியாமல் என்னென்னவோ செய்து விட்டு மேலும் மேலும் தவறான பாதையிலேயே சென்று விடுகிறார்கள்! சமீபத்திய உதாரணம் வருண் ஃபிரோஸ் காந்தி! இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாகத் தென்னகத்தில் காந்தி, நேரு என்றால் தெய்வமாகக் கும்பிடும் பாரம்பரியம் பல்லாயிரம் குடும்பங்களில் உண்டு! துரதிர்ஷ்டவசமாக, 1980 இல் பிறந்த இவருக்கு இது தெரியாமலேயே போயிற்று! நேருவின் பேரன் என்ற ஒரே வாஞ்சைக்காக சஞ்சய் காந்தி செய்த நெருக்கடி காலக் கொடுமைகளையெல்லாம் 1977 இலும் 1980 இலும் அறவே புறந்தள்ளத் தயாராயிருந்தது கிட்டத் தட்ட முழு தென்னிந்தியாவும்! இன்றைய காங்கிரஸ் தலைமையுடன் ஒத்து வரா விட்டாலும் பரவாயில்லை, இவர் இந்திரா (போனால் போகிறதென்று சஞ்சய்!) பெயரால் ஏதாவது ஒரு லெட்டர் பேட் கட்சி நடத்தினால் கூட போதும்! நாளடைவில் மேலே வரலாம், மக்கள் வாய்ப்பளிப்பார்கள்! அதை விட்டு விட்டு ‘ நேருவின் பேரனின் மகன், இந்திராவின் பேரனா இப்படி?’ என்று பலரையும் முகம் சுளிக்க வைப்பதில் என்ன லாபம்? இவர் என்னதான் தலைகீழே நின்றாலும் இவரை ஒரிஜினல் BJP யாக யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! யாராவது இவருக்கு எடுத்துச் சொல்வார்களா?!

சினிமா விரும்பி

No comments:

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...