Friday, April 3, 2009

' காதோடுதான் நான் எழுதுவேன்! '

சமீபத்தில் ஒரே நாளில் இரண்டு காது (ஒரே நபருடையதல்ல! தனித் தனி!) சம்பந்தப் பட்ட செய்திகள் idlyvadai.blogspot.com ல் வெளி வந்தன.

‘சென்னையில் துப்புரவுத் தொழிலாளியின் காது கிழிபட்டது &
பந்தயத்தில் தோற்ற பின் ரூ 50/- தராததால் நண்பரின் (!) காதைக் கடித்துத் துப்பிய வாலிபர்’

இதற்கு நான் இட்ட பின்னூட்டம் கீழே:

இப்படியும் இருக்குமா?
சே! சே! இருக்காது !
இதில் ஏதோ சூது வாது கீது!
இதைப் படிப்பவர் மனம் நிஜமாகவே உருகாது?
அமைதி விரும்பும் தமிழ்நாட்டுக்கு இது அடுக்காது!
ஐயோ! இந்தக் கொடுமையை எல்லாம் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறதே என் காது!
ஞாபகம் வருதே தினம் தூங்கும் போது!
தெலுங்குக்காரர் யாராவது சொல்லக் கூடாதா? ‘இதி நிஜம் காது'
பிரச்னையைத் தீர்க்க யாராவது போனார்களா தூது?
சரி, இப்போ எப்படியிருக்கு கிழிஞ்ச ரெண்டு பேர் காது?

சினிமா விரும்பி

No comments:

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...