Friday, May 29, 2009

பன்றிக் காய்ச்சலும் காட்டாமணக்கு இலையும்!

(பன்றிக் காய்ச்சலும் துளசி இலையும் என்ற நேர்மையான பதிவிட்டவர் மன்னிக்கவும்!)

பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்கக் காட்டாமணக்கு இலை மிகச் சிறந்தது என்று எங்கோ படித்தேன்! நாலு காட்டாமணக்கு இலையை நெய்யில் நல்ல பொன்னிறமாக வதக்கி தினம் மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன்பு கொடுத்து வந்தால் ஜன்மத்துக்குக் காய்ச்சலே வராதாம்................................ பன்றிக்கு!

சினிமா விரும்பி

Wednesday, May 13, 2009

ஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு


நண்பர் ஒருவர் வாணி ஜெயராம் பாடிய ஒரு உருது கஜலை எனக்கு அனுப்பியிருந்தார். தமிழ் மொழிபெயர்ப்பை சற்று முயற்சித்துப் பார்த்தேன்!

ஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு
(ஒரிஜினல் பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை; தெரிந்தவர்கள் சொல்லவும்)

Hum Mein Aur Tum Mein Koi Baat Nahin Hai Lekin
Log Tho Jhoote Fasaane Bhi Ghada Karthe Hain
Milne Julne Mein Koi Harj Nahin Hai Aisa
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

Mera Dil Dekh Meri Shaklo-Shabahat Pe Na Ja
Sooratein Rang-e-Zamaana Se Badhal Jaati Hain
Mai Karoon Tum Se Mohabbat Ki Koi Baat Yaqeen Math Karna
Mu Se Bekaar Ki Baatein Bhi Nikal Jaati Hain
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

Ek Belaus Mohabbat Ko Yeh Duniyawaale
Husn-e-Masoom Ka Izhaar-e-Mohabbat Samjhe
Meri Baaton Ke Us Andaaz Ko Jaana Ikraar
Meri Khamosh Tabiyath Ko Nadamath Samjhe
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

Tu Mere Paas Sahi Phir Bhi Tu Mera Tho Nahin
Waqt Ne Tujh Ko Mere Paas Bihta Rakhkha Hai
Tere Dil Mein Tho Koi Aur Basa Hai Shayad
Chhodo Yeh Baat Ke Is Baat Mein Kya Rakhkha Hai
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

பெரும் பிழை ஏதும் இல்லை உன்னிடமோ அன்றி
என்னிடமோ ஆயினும்
வெறும் வாயை மெல்லுவோர் அவல் கிடைத்தால் விடுவாரோ ?
சந்திப்பதிலோ பழகுவதிலோ அப்படி ஒன்றும் தவறு இல்லை;
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

என் மனதைப்பார் , முகவெட்டை அல்ல !
முகச்சாயல் எல்லாம் காலச் சுவடுகளால் மாறி விடுமே !
உன்னைக் காதலிக்கிறேன் என்ற எந்தப் பேச்சையும் நம்பாதே !
வெட்டி வார்த்தையும் சில சமயம் வாய்வழி வரத்தானே செய்கிறது !
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

ஊமைக்காதல் ஒன்றினை இவ்வுலகோர்
அழகி (ஆண் மயக்கி ?) ஒருத்தியின் அழைப்பென்று நினைத்தார்;
நான் பேசும் பாணியை இணக்கம் என்று திரித்தார்;
என் மௌனத்தை சம்மதம் என்று கதைத்தார்;
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

நீ என்னருகேதான் ஆயினும் என்னவன் இல்லையே !
காலம் உன்னை என்னிடம் அடமானம் அன்றோ வைத்தது;
(எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்ள !)
உன் உள்ளத்தில் வேறு எவளோ உறைகிறாள் போலும் !
விட்டுத் தள்ளு ! காதல் எனதுதானே ! உனக்கென்ன நஷ்டம் !
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

சினிமா விரும்பி

Friday, May 1, 2009

வலைப் பதிவர்களுக்கு ஓர் அறிவிப்பு!

நண்பர்களே,

என்னுடைய Wordpress வலைத்தளமான http://cinemavirumbi.tamilblogs.com ஏதோ சில தொழில்நுட்பக் கோளாறுகளால் சில நாட்களாக சரிவர இயங்கவில்லை. அது சரியாகும் வரை நண்பர்கள் என்னுடைய மற்றொரு வலைத்தளமான http://cinemavirumbi.blogspot.com க்கு அவ்வப்போது வருகை தரவும்.

நன்றி!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...