Tuesday, September 7, 2010

'கவிக்கோ அப்துல் ரஹ்மான்'

முன்பொரு முறை குமுதத்தில் படித்தது:

கவிக்கோ அப்துல் ரஹ்மான் திரைப் படப் பாடல் எழுதுவதில் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை. நண்பர் ஒருவர் ' உங்கள் பாடல் சிதைக்கப் படாது' என்று உறுதியளித்து இரண்டு பாடல்கள் அவரை வலுக் கட்டாயமாக எழுத வைத்தார் . முதல் பாடல் ' என்னடி கோபமா? உன் பக்தனுக்கு நீ தருவதென்ன சாபமா? 'என்று துவங்கியது. மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன திரை உலகில் இது முற்றிலும் புரட்சிகரமானது. சவுண்ட் என்ஜினீயர் உடனே சொன்னார் ' என்ன சார்? முதல் பாட்டிலேயே சாபம், கீபம் என்றெல்லாம் வருது!' கவிஞர் பட்டென்று பதிலளித்தார் ' அப்படியானால் இரண்டாவது பாட்டை முதலில் ரெகார்ட் பண்ணுங்க' . விசித்திரத்திலும் விசித்திரம், அந்தப் படம் கடைசியில் வெளி வரவே இல்லை! இப்போது சொல்லுங்கள் இது மூட நம்பிக்கையா இல்லையா?

சினிமா விரும்பி

No comments:

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...